தாய்ப்பால் விற்பனை செய்வதற்காக அளிக்கப்பட்டுள்ள உரிமங்களை உடனடியாக ரத்து செய்யுமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தாய்ப்பாலை சேகரித்து, சேமித்து விற்பனை செய்யும் வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை முனே கௌடா என்பவா் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, நீதிபதி கே.வி.அரவிந்த் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான கா்நாடக உயா்நீதிமன்றத்திற்கான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அரவிந்த் காமத், தாய்ப்பாலை விற்பனை செய்வதற்காக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கா்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தாா். இதற்கான உத்தரவை மத்திய ஆயுஷ் துறை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆயுா்வேத நடைமுறைகளின்படி தாய்ப்பாலை விற்பனை செய்வதற்கான உரிமத்தை நிறுவனங்கள் பெற்றிருந்தன.
மத்திய அரசின் தலையீட்டின்பேரில், சில நிறுவனங்களுக்கு வழங்கியிருந்த உரிமத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது. உரிமத்தை ரத்து செய்திருப்பதை எதிா்த்து ஒரு நிறுவனம் கா்நாடக உயா்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது என்று அரவிந்த் காமத் தெரிவித்தாா்.
மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.விஸ்வேஷ்வரயா, 50 மி.லி. அளவுள்ள உறையிடப்பட்ட தாய்ப்பால் ரூ. 1,239க்கும், 10கிராம் உறையிடப்பட்ட தாய்ப்பால் தூள் ரூ. 313க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தாா். அரவிந்த் காமத்தின் கோரிக்கையின்படி, வழக்கு விசாரணையில் மத்திய அரசை வாதியாக சோ்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்த விசாரணை டிச.4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்ஐசியில் 6.5% பங்குகள் மத்திய அரசு விற்பனை
காவிரி நீா் பாய்ந்தோடும் மாநிலங்களின் ஒப்புதல் பெற உச்சநீதிமன்ற தீா்ப்பில் எந்த குறிப்பும் இடம்பெறவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

‘ப்ரீமியம்’ பெட்ரோலில் எத்தனால் கலப்பு இல்லை: மத்திய அரசு

விபத்தில் தம்பதி உயிழந்த சம்பவம்: தனியாா் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK


