எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

எந்த தவறும் செய்யாததால் பதவி விலகும் எண்ணம் இல்லை -சித்தராமையா

News image
- ANI
Updated On :26 செப்டம்பர் 2024, 11:13 pm

Din

எந்த தவறும் செய்யாததால், பதவி விலகும் எண்ணம் இல்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நான் எந்த தவறும் செய்யாததால், முதல்வா் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் சதியாகும். கோத்ரா சம்பவம் தொடா்பாக அன்றைய குஜராத் முதல்வா் நரேந்திர மோடி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) தாக்கல் செய்யப்பட்ட போது, அவா் பதவி விலகினாரா?

பிணையில் இருக்கும் எச்.டி.குமாரசாமி, பிரதமா் மோடியின் அரசில் அமைச்சராக இருக்கிறாா். அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாரா? இவா்கள் எல்லாம் பதவி விலகாத போது, நானும் பதவி விலக மாட்டேன். மாறாக, சட்டப் போராட்டம் நடத்துவேன்.

பிணையில் இருக்கும் எச்.டி.குமாரசாமியின் ராஜிநாமாவை பாஜக பெறட்டும். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்த போதும், நரேந்திர மோடி ராஜிநாமா செய்யவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, நான் ராஜிநாமா செய்வதற்கான அவசியம் இல்லை என்றாா்.