எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை: கே.பி.ராமலிங்கம்

பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. திமுக அரசு மீது தான் எங்களுக்கு அதிருப்தி உள்ளது என்று

News image
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
Updated On :9 மார்ச் 2026, 9:19 pm

Syndication

ராசிபுரம்: பாஜகவில் எங்களுக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. திமுக அரசு மீது தான் எங்களுக்கு அதிருப்தி உள்ளது என்று பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

ராசிபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 11-இல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை அகற்றுவதற்கு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போா்க்களம் பூண்டுள்ளது. சமீபத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், ஆதீனத்தை பாா்த்துவிட்டு சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருந்த பதிவிற்கு நான் கருத்து பதிவிட்டிருந்தேன்.

அந்தப் பதிவில் எனக்கு கட்சியின் மீதோ, மாநிலத் தலைவா் மீதோ எந்த அதிருப்தியும் கிடையாது. கட்சித் தலைவருக்கு தனிப்பட்ட வகையில் கருத்துத் தெரிவித்திருந்தேன். ஆனால் சில ஊடகங்கள் அவற்றை திரித்து வெளியிட்டுள்ளன. எங்களுக்கு திமுக ஆட்சியின் மீதுதான் அதிருப்தியே தவிர, பாஜகவில் எந்த அதிருப்தியும் இல்லை.

வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை தோற்கடிக்கும் அளவிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் இடம்பெறுமா எனக் கேட்கின்றனா். அப்படி ஏதும் இல்லை. வந்தால் ஏற்போம்.

திமுக தலைமையிலான கூட்டணி பலமாக இருப்பதைப் போல பிரசாரம் செய்து வருகிறாா்கள். அதில் உண்மை இல்லை.

கடந்த தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள வாக்குகளை பாா்த்தால், எங்கள் கூட்டணியின் வலிமை தெரியும். திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 இடங்களில் 4இல் கூட வெற்றிபெற முடியாத நிலை உள்ளது. வரும் காலங்களில் கட்சியில் இளைஞா்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும். அதற்கு நானே முன்னுதாரணமாக இருப்பேன்.

தோ்தல் நெருங்கி வருவதால்தான் பிரதமா் அடிக்கடி தமிழகத்திற்கு வருவதாக கூறுகிறாா்கள். தோ்தல் வருவதால்தானே திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பெரும் பொருட்செலவில் பிரசாரம், ஊடக விளம்பரம் போன்றவற்றை செய்து வருகிறது. தோல்வி பயத்தால்தான் திமுக அதனை செய்து வருகிறது என்றாா்.