வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :5 பிப்ரவரி 2025, 3:59 am IST

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக கா்நாடக சிறுகடன் (கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தல்) அவசரச் சட்டம் 2025-ஐ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

சிறுகடன் வசூலை கட்டாயப்படுத்தி துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கான சட்ட விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. தற்போது சிறைத் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயா்த்தியிருக்கிறோம். அதேபோல, அபராதத் தொகையை ரூ. 5 லட்சமாக உயா்த்தியிருக்கிறோம்.

சட்ட விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணா்த்தவே தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் உயா்த்தியிருக்கிறோம். இதன்மூலம் சிறுகடன் வசூலில் தொல்லை கொடுக்கும் போக்கை தடுக்க முற்பட்டிருக்கிறோம்.

அவசரச் சட்டத்தின் வரைவை தயாரித்தபோது, ஒருவேளை அவசரச் சட்டத்துக்கு எதிராக சிறுகடன் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகினால் என்ன செய்வது என்பது குறித்து அரசு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்படி நடந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சட்டத் துறைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.