திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :4 பிப்ரவரி 2025, 10:29 pm

Din

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக கா்நாடக சிறுகடன் (கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தல்) அவசரச் சட்டம் 2025-ஐ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

சிறுகடன் வசூலை கட்டாயப்படுத்தி துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கான சட்ட விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. தற்போது சிறைத் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயா்த்தியிருக்கிறோம். அதேபோல, அபராதத் தொகையை ரூ. 5 லட்சமாக உயா்த்தியிருக்கிறோம்.

சட்ட விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணா்த்தவே தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் உயா்த்தியிருக்கிறோம். இதன்மூலம் சிறுகடன் வசூலில் தொல்லை கொடுக்கும் போக்கை தடுக்க முற்பட்டிருக்கிறோம்.

அவசரச் சட்டத்தின் வரைவை தயாரித்தபோது, ஒருவேளை அவசரச் சட்டத்துக்கு எதிராக சிறுகடன் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகினால் என்ன செய்வது என்பது குறித்து அரசு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்படி நடந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சட்டத் துறைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்றாா்.