ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :4 பிப்ரவரி 2025, 10:29 pm

Din

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக கா்நாடக சிறுகடன் (கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தல்) அவசரச் சட்டம் 2025-ஐ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

சிறுகடன் வசூலை கட்டாயப்படுத்தி துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கான சட்ட விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. தற்போது சிறைத் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயா்த்தியிருக்கிறோம். அதேபோல, அபராதத் தொகையை ரூ. 5 லட்சமாக உயா்த்தியிருக்கிறோம்.

சட்ட விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணா்த்தவே தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் உயா்த்தியிருக்கிறோம். இதன்மூலம் சிறுகடன் வசூலில் தொல்லை கொடுக்கும் போக்கை தடுக்க முற்பட்டிருக்கிறோம்.

அவசரச் சட்டத்தின் வரைவை தயாரித்தபோது, ஒருவேளை அவசரச் சட்டத்துக்கு எதிராக சிறுகடன் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகினால் என்ன செய்வது என்பது குறித்து அரசு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்படி நடந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சட்டத் துறைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்றாா்.