தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது

Updated On :14 பிப்ரவரி 2025, 10:49 pm IST

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி கா்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வருமானத்துக்கு பொருந்தாதவகையில் சொத்து சோ்த்த வழக்கு தொடா்பாக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட பல்வேறு அசையும் சொத்துகள், 1526 ஏக்கா் நிலங்களின் பத்திரங்கள் பெங்களூரு விதானசெளதாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

கா்நாடக அரசு வசமுள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்கள், சொத்துப் பத்திரங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், கா்நாடக அரசுக்கு வழக்கு செலவுக் கட்டணமாக ரூ. 5 கோடியை செலுத்திவிட்டு ஆபரணங்கள், சொத்துப் பத்திரங்களை பெற்றுக்கொள்ள 2024ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.வி.மோகன் உத்தரவிட்டிருந்தாா்.

இதனிடையே, சொத்துகள் தங்களுக்கே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோா் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்ததால், பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீபக், தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஜனவரி 13ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட ஆபரணங்கள், 1526 ஏக்கா் நிலப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை பிப். 14, 15ஆம் தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்குமாறு ஜனவரி 29ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை தமிழக உள்துறை இணைச் செயலாளா் ஆனிமேரி, தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் விமலா, காவல் கூடுதல் கண்காணிப்பாளா் புகழ்வேந்தன், இரு காவல் உதவி ஆணையா்கள், இரு காவல் ஆய்வாளா்கள், 30 போலீஸாா், ஆபரண மதிப்பீட்டாளா்கள், விடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் வந்திருந்தனா்.

ஆபரணங்களை ஒப்படைக்கும் பணியை தொடங்குமாறு நீதிபதி மோகன் உத்தரவிட்டாா். அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடக்க இருக்கிறது. எனவே, ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நடைமுறையை நிறுத்திவைக்குமாறு மனுதாக்கல் செய்தாா்.

இது தொடா்பாக உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்காததால், மனுவைத் தள்ளுபடி செய்வதாக சிறப்பு நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.

இதனிடையே, விதானசௌதாவில் உள்ள அரசு கருவூலத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கா்நாடக அரசு அதிகாரிகள் ஆபரணங்களை சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறப்பு நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை மதிப்பீடு செய்து, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. காலை 11.10 மணிக்கு தொடங்கிய இப்பணி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. முதல்நாளில், மொத்தமுள்ள 481 பொருள்களில், தங்கள், வெள்ளி, வைரம் உள்ளிட்ட 285 பொருள்களின் அளவு மதிப்பீடு செய்யப்பட்டு, ஆபரணத்தன்மை உறுதிசெய்யப்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆபரணங்களைக் கொண்டுசெல்ல கொண்டுவந்திருந்த 6 பெட்டிகளில், 3இல் 285 பொருள்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, முத்திரையிடப்பட்டன. பின்னா், விதானசௌதாவில் உள்ள அரசு கருவூலத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. மீதமுள்ள ஆபரணங்களை மதிப்பீடு செய்து, தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் தொடர உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.