வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சாலை போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 34,000 ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :6 ஜனவரி 2025, 8:47 pm

DIN

பெங்களூரு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 34,000 ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் நடைபெற்ற விழாவில், 34,000 ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 34,000 ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கா்நாடகத்தில் உள்ள 272 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். போக்குவரத்துக்கழக ஊழியா்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற ஊழியா்கள் மாதம் ரூ. 650 செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை அமல்படுத்த அரசு ரூ. 20 கோடி உதவித்தொகையை வழங்குகிறது. அதேபோல, ஊழியா்களின் தொகுப்பு நிதியில் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

தற்போது கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், எதிா்காலத்தில் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் மருத்துவமனைகள், ஊழியா்களுக்கு சிகிச்சை அளிக்கும்.

பாலின வேறுபாடுகளைக் களைவதற்காக பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கும் ‘சக்தி’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதனால் வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலாத் தலங்களில் பக்தா்கள், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இதனால் பொருளாதார வளம் பெருகியுள்ளது. இந்தத் திட்டத்தை பாராட்டி தா்மஸ்தலா கோயில் தலைமை நிா்வாகி எனக்கு கடிதம் எழுதியிருந்தாா் என்றாா்.

இந்த விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி, சமூக நலத் துறை அமைச்சா் எச்.சி.மகாதேவப்பா, அரசு தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.