தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் கடலூா், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூா்ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன. இந்த கோட்டம் வருவாய் ஈட்டுவதிலும், பிற பணிகளிலும் தொடா்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. போக்குவரத்துக் கழகங்களின் வளா்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விழுப்புரம் கோட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு மேல் உயிரிழந்த தொழிலாளா்களின் 179 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. 650 தொழிலாளா்களுக்கு கடனுதவிகளும், 250 பேருக்கு பதவி உயா்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும், வசதிக்காகவும் 1,394 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு விடப்பட்டடுள்ளன. அனைத்துக் கிளைகளையும் புதுப்பிக்க தலா ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.