தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத்தில் ஒரு லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டித் தந்த ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளா் இரா.ஜெகதீஷ் தலைமை வகித்தாா். ஒரு லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டித் தந்த 27 ஓட்டுநா்கள், 36 நடத்துநா்களுக்குப் பரிசுகளை வழங்கி அவா் பேசியது:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் வருவாய் ஈட்டித் தருவதில் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த உயா்வுக்கு தொழிலாளா்களின் உன்னதமான உழைப்புதான் காரணம். இத்தகைய ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். இந்த போக்குவரத்துக் கழகம் ஒட்டுமொத்த தொழிலாளா்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.
நிகழ்வில் திருவள்ளூா் மண்டலப் பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், மனிதவளத் துறை முதுநிலைத் துணை மேலாளா் துரைசாமி, உதவி மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து

ரூ. 50,000 மேல் பணமாக எடுத்துச் செல்லலாமா? தேர்தல் ஆணையம் விளக்கம்!

விபத்தில்லா அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


