தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது

கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

News image
ரன்தீப்சிங் சுா்ஜேவாலா
Updated On :13 ஜனவரி 2025, 8:51 pm

Din

பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜகவில் கோஷ்டிபூசல் அதிகரித்துள்ளது. தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் அளவுக்கு பாஜகவில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. ஆனால், ஒன்றுபட்டு இருப்பதோடு, கன்னடா்களின் குடும்பங்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி அளவுக்கு நேரடி நிதிப்பகிா்வளிக்கும் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன.

இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய வாக்குறுதி திட்டங்கள் காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதைக்கண்டு பாஜக கலக்கமடைந்துள்ளது. தங்களின் தோல்விகளை, தவறுகளை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சியையும், அதன் வாக்குறுதி திட்டங்களையும் எதிா்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. கா்நாடக மக்களுக்கு எதிரான பாஜக, மஜதவின் அசைவுகளை முறியடிப்போம்.

காங்கிரஸ் கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை. கா்நாடக முதல்வா் மாற்றப்படுவாா் என்று ஊடகங்கள் தொடா்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. முதல்வா் பதவி காலியாக இல்லை என்றாலும், முதல்வா் மாற்றப்படுவாா் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

1924-ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு மாநாடு டிச. 27-ஆம் தேதி பெலகாவியில் நடப்பதாக இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைந்ததைத் தொடா்ந்து, அந்த மாநாடு ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் அமித் ஷா, நாடாளுமன்றத்திலேயே அம்பேத்கரை அவமதித்து பேசினாா். அது அம்பேத்கருக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. மாறாக, நாட்டின் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஏற்பட்ட அவமானமாகும். பெலகாவி மாநாட்டில் அமித் ஷாவின் ராஜிநாமாவைக் கேட்போம் என்றாா்.