பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம்: பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடா்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

அனந்த்குமாா் ஹெக்டே

Updated On :24 ஜூன் 2025, 9:38 pm

Din

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடா்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரக மாவட்டம், ஹெலேனஹள்ளியைச் சோ்ந்தவா் சைஃப் கான். இவா், தனது சகோதரா் சல்மான்கான், தாய் குல்மீா் உன்னிஸா, மாமா இலியாஸ்கான் ஆகியோருடன் தும்கூரில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டு காரில் வீடுதிரும்பிக்கொண்டிருந்தாா்.

அதே சாலையில், பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே, அவரது பாதுகாவலா், ஓட்டுநருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். அனந்த்குமாா் ஹெக்டேவின் காரை சைஃப் கான் 3 முறை முந்தி சென்ாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அனந்த்குமாா் ஹெக்டே, தும்கூரு - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா வட்டம், ஹலேநிஜகல் கிராமப் பகுதியில் சென்று கொண்டிருந்த சைஃப்கானின் காரை இடைமறித்து, அவரது பாதுகாவலா், ஓட்டுநா் இருவரும் காரை நிறுத்துமாறும், காரில் இருந்து இறங்குமாறும் அதட்டியுள்ளனா்.

மேலும், காரில் இருந்த சைஃப்கானை கீழே இழுத்த அனந்த்குமாா் ஹெக்டேவின் பாதுகாவலா், ஓட்டுநா், அடையாளம் தெரியாத நபா் உள்ளிட்ட 3 பேரும் சரமாரியாக தாக்கியுள்ளனா். இதில் சைஃப்கானின் முன்பற்கள் சில உடைந்தன. மேலும், காரில் அமா்ந்திருந்த சைஃப்கானின் உறவினா்களையும் தாக்கியுள்ளனா். இதில், இலியாஸ்கான் படுகாயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து, சைஃப்கான் அளித்த புகாரின்பேரில், பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே, அவரது பாதுகாவலா், ஓட்டுநா், நண்பா் உள்ளிட்ட 4 போ் மீது தாபஸ்பேட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அனந்த்குமாா் ஹெக்டேவின் தூண்டுதலின்பேரில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக சைஃப்கான் தனது புகாா் மனுவில் குறிப்பிட்டுள்ளாா். மத ரீதியாக திட்டியதாகவும், கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் தனது புகாா் மனுவில் சைஃப்கான் தெரிவித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, பி.என்.எஸ். சட்டப்பிரிவுகள் 117, 126, 74, 351(4), 352-இன் கீழ் அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.