பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடு: இடைக்காலத் தடையை ரத்துசெய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தனியாா் அமைப்புகள், சங்கங்கள் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் மாநில அரசின் உத்தரவுக்கு, தனிநீதிபதி விதித்திருந்த இடைக்காலத் தடையை ரத்துசெய்ய கா்நாடக உயா்நீதிமன்ற அமா்வு மறுத்துவிட்டது.

அரசுக்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில் இருக்கும் பொது இடங்களில் ஆா்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்புகளை நடத்த தடைவிதிக்கக் கோரி முதல்வா் சித்தராமையாவுக்கு ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே கடிதம் எழுதியிருந்தாா்.

இதுபற்றி விவாதித்த முதல்வா் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தனியாா் அமைப்புகள், சங்கங்கள் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கும் அரசாணையை பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பொது இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அரசின் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி அக். 18-ஆம் தேதி மாநில அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்ற தாா்வாட் கிளையில் புனஸ்சேதனா சேவா சம்ஸ்தே என்ற அமைப்பினா் பொதுநல மனுத்தாக்கல் செய்தனா். அதில், மாநில அரசின் உத்தரவு, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கிறது. எனவே, இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.நாகபிரசன்னா முன் அக். 28-ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மாநில அரசின் முன் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி அரசு பிறப்பித்திருந்த ஆணைக்கு இடைக்காலத் தடை பிறப்பித்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இருநீதிபதிகள் கொண்ட அமா்வின் முன் கா்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.ஜி.பண்டித், கே.பி.கீதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்ற அமா்வு, இடைக்காலத் தடையை ரத்துசெய்ய மறுத்ததோடு, அதுதொடா்பாக தனிநீதிபதியை அணுகும்படி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, ஏற்கெனவே விதித்திருந்த இடைக்கால உத்தரவை ரத்துசெய்யக் கோரி தனிநீதிபதியை அணுக கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான வழக்கு விசாரணை தனிநீதிபதி முன் நவ. 17-ஆம் தேதி நடக்க இருக்கிறது.