அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சற்று நிதானித்திருக்கலாம்!

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்திருந்தும்கூட சர்வதேச சந்தையில் போட்டி போட முடியுமா என்பது கேள்விக்குறி.

News image
கோதுமை- பிரதிப் படம்
Updated On :2 மார்ச் 2026, 9:58 pm

ஆசிரியர்

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதி வழங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும்கூட, வேளாண் பொருளாதார ஆய்வாளர்கள் மத்திய அரசு அவசரப்பட்டிருக்கிறது என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள்.

25 லட்சம் டன் கோதுமை மட்டுமல்லாமல், 5 லட்சம் டன் கோதுமை சார்ந்த பொருள்களுக்கும் ஏற்றுமதி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு விற்பனை விலை குறைந்துவிடாமல் பாதுகாப்பதும், இந்த முடிவு காரணமாக விவசாயிகள் ஏற்றுமதி மூலம் கூடுதல் ஆதாயம் பெறுவதும் அரசின் முடிவுக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.

கோதுமை மாவு, ரவை, மைதா உள்ளிட்ட கோதுமை சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்பவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சில வாரங்களுக்கு முன்பு கோதுமை அரைவை ஆலைகள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனை மையங்கள், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்பவர்கள் ஆகியோரின் கையிருப்புக்கான வரம்பு அகற்றப்பட்டது. குறிப்பிட்ட அளவுக்குமேல் கோதுமையை வாங்கிக் கிடங்குகளில் கையிருப்பாக வைத்துக் கொள்வதால், செயற்கையாக விலை அதிகரிக்கிறது என்கிற கருத்து நிலவுவதால் அப்படியொரு வரம்பு முன்பு விதிக்கப்பட்டிருந்தது.

கோதுமை சாகுபடிப் பரப்பு இந்தப் பயிராண்டில் 3.34 கோடி ஹெக்டேர் என்று அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் 3.28 கோடி ஹெக்டேரைவிட சற்று அதிகம். 2025-26-க்கு கோதுமை உற்பத்திக்கான இலக்கு 11.9 கோடி டன் என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. 2025-26-க்கான கோதுமை கொள்முதல் விலை குவிண்டாலுக்கு (100 கி.கி.) ரூ. 2,585 என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, அரசின் இந்திய உணவு தானியக் கழகத்தின் (ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) கிடங்குகளில் 2.75 கோடி டன் கோதுமை கையிருப்பாக இருக்கிறது. அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு வழங்கப்பட்டாலும்கூட, ஏப்ரல் 1-ஆம் தேதி சுமார் 2 கோடி டன் கிடங்குகளில் இருக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அந்தப் பின்னணியில்தான் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் முடிவை வேளாண் அமைச்சகம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பருவநிலை தவறுவதால் பிரச்னைகள் ஏற்படுமானால், மகசூலை மட்டுமல்ல, மொத்த உற்பத்தியின் அளவையும் அது பாதிக்கும். அப்படி நேர்ந்தால், சந்தை விலை கடுமையாக அதிகரிக்கும் என்பதுடன், அரசின் கொள்முதலும் கடுமையாகப் பாதிக்கும். விவசாயிகள் அரசின் கொள்முதல் விலைக்கு தாங்கள் உற்பத்தி செய்த கோதுமையை வழங்க முன்வர மாட்டார்கள்.

கோதுமை ஏற்றுமதிக்கு அரசு அனுமதித்திருப்பது என்பது வரவேற்கத்தக்க கொள்கை முடிவுதான் என்பதில் ஐயப்பாடில்லை. அதே நேரத்தில், அறிவிப்பு வெளியாகி இருக்கும் நேரம்தான் சரியில்லையோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது. பருவநிலையில் காணப்படும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொள்ளாமல் கையிருப்பையும், உற்பத்தி எதிர்பார்ப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதோ என்பதுதான் அந்த ஐயப்பாட்டுக்குக் காரணம்.

தற்போது பயிரிடப்பட்டிருக்கும் 3.34 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பில் கோதுமை வளர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் அவை அறுவடைக்குத் தயாராகிவிடும். வளர்ச்சியின்போது பகல்நேர வெப்ப நிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸில் தொடர்ந்தால்தான், கோதுமைப் பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, கதிர் செழிப்பாக மகசூலைத் தரும். இப்போது நாம் அந்தக் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம்.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாகி வருவது கவலையளிக்கிறது. கிழக்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மத்திய இந்தியப் பகுதிகள் பரவலாகக் கோதுமை சாகுபடியில் ஈடுபடும் பகுதிகள். அந்தப் பகுதிகளில் போதுமான அளவு குளிர்கால மழைப்பொழிவு இல்லாததால் காற்றில் ஈரப்பதம் குறைவாகக் காணப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 'எல் நினோ' ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அது கடுமையாக இருக்குமா அல்லது பாதிப்பில்லாமல் கடந்து போகுமா என்று இப்போதே கூறிவிட முடியாது. 'எல் நினோ' வறண்ட பருவநிலையை உருவாக்கினால் அது நிச்சயமாக 2026-27 காரிஃப் பருவப் பயிர்களை பாதிக்கக்கூடும்.

இன்னொரு பிரச்னையையும்கூட நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. ஆர்ஜென்டீனா உள்ளிட்ட நாடுகளின் கோதுமை டன் ஒன்றுக்கு சுமார் 250 முதல் 260 டாலர் சந்தைப்படுத்தப்படும்போது, இந்திய கோதுமையின் விலை டன் ஒன்றுக்கு 300 டாலர். டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்திருந்தும்கூட சர்வதேச சந்தையில் போட்டி போட முடியுமா என்பது கேள்விக்குறி.

நமது கோதுமைப் பயிர்கள் வெப்பம் காரணமாக உற்பத்திக் குறைவை எதிர்கொள்ளும் என்று அச்சம் எழுப்புவதல்ல நோக்கம். ஆனால், அறுவடை முடிவதற்கு முன்பு ஏற்றுமதிகளுக்கு அனுமதித்திருப்பதால், பின்விளைவுகளுக்கும் அரசு தயாராக இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.