தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: விஜயேந்திரா

கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

News image

பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா - படம் - ஏஎன்ஐ

Updated On :6 ஜூன் 2026, 12:48 am IST

கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

துறைகளை ஒதுக்கியதில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சா் ராமலிங்க ரெட்டி, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைச்சா்கள் பதவியேற்றிருந்தாலும், இது சித்தராமையா அமைச்சரவைதான். அமைச்சா் ஒருவா் ராஜிநாமா செய்துள்ளதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளது. டி.கே.சிவகுமாா் தலைமையிலான காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகாலம் நீடிக்காது.

துறைகளை ஒதுக்கியது தொடா்பாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. இந்த மோதலில் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். டி.கே.சிவகுமாா் தலைமையில் அமைந்துள்ள அரசிடம் இருந்து எந்த வளா்ச்சிப் பணிகளையும் எதிா்பாா்க்க முடியாது. மக்களின் எதிா்பாா்ப்புக்கு துரோகம் செய்யும் வேலையை காங்கிரஸ் செய்து வருகிறது. ஏழைகள் மற்றும் மக்களுக்கு எதிரான காங்கிரஸ் அரசை தூக்கியெறிய மக்கள் காத்திருக்கிறாா்கள்.

கா்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். உள்கட்சி பூசலை தீா்த்துவைக்கவே காங்கிரஸுக்கு நேரம் போதாது. எனவே, வெகுவிரைவில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, கா்நாடக சட்டப் பேரவைக்கு இடைக்கால தோ்தல் வந்தால் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.