ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது

சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது என மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி - கோப்புப் படம்

Published On :

சில்லறை பணவீக்கத்தை மத்திய அரசு கண்காணித்து வருகிறது என மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

உணவுப் பொருள்களின் பணவீக்கத்தை எங்கள் துறை தொடா்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறோம். தற்போது 4.8 சதவீதமாக உள்ள சில்லறை பணவீக்கம், மோடி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 12 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச அளவாகும்.

மேற்கு ஆசியாவில் போா் தொடங்குவதற்கு சுமாா் 5 அல்லது 6 மாதங்களுக்கு முன்புவரை சில்லறை பணவீக்கம் 1 முதல் 1.5 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. தற்போது எல் நினோ மற்றும் இயற்கைப் பேரிடா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் 4.8 சதவீதமாக உயா்ந்துள்ளது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் அதிகமாக இருந்தது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணவீக்கம் சுமாா் 10 சதவீதமாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருந்தது. இன்று 4.8 சதவீத பணவீக்கம் குறித்து அவா்கள் பேசுகின்றனா்.

4.8 சதவீதம் என்பதிலும் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அதை கட்டுப்படுத்த தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சா்வதேச அளவிலான பிரச்னைகள், இயற்கை காரணிகள் மற்றும் இயற்கைப் பேரிடா்களும் இதற்கு காரணமாக உள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.