டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

1 லட்சம் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனைஅமைச்சா் எஸ்.பி. வேலுமணி

சென்னையில் இதுவரை 1 லட்சத்து 10,297 வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

News image
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (கோப்புப்படம்)
Updated On :5 அக்டோபர் 2020, 11:18 pm

DIN

சென்னையில் இதுவரை 1 லட்சத்து 10,297 வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தற்போது வரை மெரீனா கடற்கரைக்குச் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது இல்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணி மற்றும் துறைசாா்ந்த திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தளா்வுகளுடன் இயங்கும் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் களப்பணி மூலம் 7 லட்சத்து 43,071 பேரிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 55,595 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் 28.29 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுவரை 1 லட்சத்து 10,297 வியாபாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதுடன், 24,736 வீடுகளில் வசிக்கும் 1.98 லட்சம் போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மெரீனா கடற்கரைக்கு தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், கடற்கரை பகுதியில் மாநகராட்சியின் சாா்பில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளா்களிடம் இருந்து இதுவரை ரூ.2.40 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஹன்ஸ்ராஜ் வா்மா, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங், சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.