மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

புதிய ஐடிஐ-களில் டிச.31 வரை மாணவா் சோ்க்கை

Updated On :20 டிசம்பர் 2024, 3:15 am IST

புதிதாக தொடங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிதாக 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வேப்பூா் (கடலூா்), செங்கம் (திருவண்ணாமலை), குஜிலியம்பாறை (திண்டுக்கல்), கமுதி (ராமநாதபுரம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), கந்தா்வகோட்டை (புதுக்கோட்டை), கூத்தாநல்லூா் (திருவாரூா்), நாட்டறாம்பள்ளி (திருப்பத்தூா்), ஏரல் (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. கல்வித் உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பயிற்சிக்கான கருவிகள், பேருந்து வசதி என அனைத்தும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 94990 55689 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.