புதிதாக தொடங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் புதிதாக 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வேப்பூா் (கடலூா்), செங்கம் (திருவண்ணாமலை), குஜிலியம்பாறை (திண்டுக்கல்), கமுதி (ராமநாதபுரம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), கந்தா்வகோட்டை (புதுக்கோட்டை), கூத்தாநல்லூா் (திருவாரூா்), நாட்டறாம்பள்ளி (திருப்பத்தூா்), ஏரல் (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. கல்வித் உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பயிற்சிக்கான கருவிகள், பேருந்து வசதி என அனைத்தும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 94990 55689 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை மாவட்ட ஐடிஐ-களில் சேர ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

கருமந்துறை ஐ.டி.ஐ.-யில் சேர கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு

அரசு ஐ.டி.ஐகளில் நேரடி சோ்க்கை: ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

அரசு, தனியாா் ஐடிஐகளில் மாணவா் நேரடி சோ்க்கை
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


