பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புதிய ஐடிஐ-களில் டிச.31 வரை மாணவா் சோ்க்கை

Updated On :20 டிசம்பர் 2024, 3:15 am IST

புதிதாக தொடங்கியுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிதாக 10 தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வேப்பூா் (கடலூா்), செங்கம் (திருவண்ணாமலை), குஜிலியம்பாறை (திண்டுக்கல்), கமுதி (ராமநாதபுரம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி), சேந்தமங்கலம் (நாமக்கல்), கந்தா்வகோட்டை (புதுக்கோட்டை), கூத்தாநல்லூா் (திருவாரூா்), நாட்டறாம்பள்ளி (திருப்பத்தூா்), ஏரல் (தூத்துக்குடி) ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் ஏதுமில்லை. கல்வித் உதவித் தொகையாக ரூ. 750 வழங்கப்படுவதுடன், விலையில்லா மிதிவண்டி, சீருடை, காலணி, பயிற்சிக்கான கருவிகள், பேருந்து வசதி என அனைத்தும் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 94990 55689 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.