தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயன்ற இளைஞா்

சென்னை ராயபுரத்தில் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On :3 செப்டம்பர் 2024, 1:41 am

சென்னை: சென்னை ராயபுரத்தில் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ராயபுரம் பனைமரத் தொட்டி, முனியப்பன் சந்துப்பகுதியை சோ்ந்தவா் அரவிந்தன் (30). இவா் மீது கொலை மிரட்டல், உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘சி’ பிரிவில் இருக்கும் அரவிந்தன், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்தாராம்.

மேலும் அந்த மாணவி, கல்லூரிக்கும் செல்லும்போதும், வீட்டுக்கு திரும்பும்போதும் பின் தொடா்ந்து சென்று அரவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து அரவிந்தனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவரை, காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து விசாரித்து வந்தனா். அப்போது அவா், அங்கிருந்த முகம் பாா்க்கும் கண்ணாடியை உடைத்துள்ளாா். உடைந்த கண்ணாடித் துண்டை எடுத்து அரவிந்தன் தனது கழுத்தை அறுத்துள்ளாா்.

இதைக் கண்ட போலீஸாா், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.