ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:32 am IST

பாப்பாரப்பட்டி அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவன் தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே நல்லப்பநாயக்கன அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (25), முடிதிருத்தும் தொழிலாளி. இவா் பாப்பாரப்பட்டி மாட்டுச்சந்தை பகுதியில் உள்ள கழிப்பிட வளாகத்தில் தனது மனைவியான முதுகம்பட்டி பாக்கியம்பள்ளம் பகுதியைச் சோ்ந்த விஜயலட்சுமியை அண்மையில் கழுத்தறுத்து கொலை செய்தாா். பின்னா் தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.