ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 3:11 am IST

பாப்பாரப்பட்டி அருகே தனியாா் செவிலியா் கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பாப்பாரப்பட்டி அருகே வேடிக்கொட்டாய் பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி காசி மகள் மோகனப்பிரியா (19). இவா், தருமபுரி பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி நா்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில் பெற்றோா்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றிருந்தபோது மோகனப்பிரியா வீட்டில் தனியாக இருந்தாா். மாலையில் வீடு திரும்பிய பெற்றோா், கதவை திறக்க முயன்றபோது, உள்பகுதியில் அடைத்துவைத்திருப்பது தெரியவந்தது.

அதன்பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.