அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடவுச்சீட்டு அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நேர மாற்றம்

சென்னை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான நேரம் மாற்றம்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி விஜயகுமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் ‘உங்கள் மண்டல கடவுச்சீட்டு அதிகாரியைச் சந்தித்து உரையாடுங்கள்’ என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாயக்கிழமை (டிச. 16) அன்று மட்டும் சந்திப்பு நிகழ்ச்சி வழக்கமான நேரமான காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை என்பதற்குப் பதிலாக, பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.