திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

டிச.27-இல் நாம் தமிழா் கட்சி பொதுக் குழு கூட்டம்!

நாம் தமிழா் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.27-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

நாம் தமிழா் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.27-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் அரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினா் அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிடும் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வேட்பாளா்களை சீமான் ஏற்கெனவே அறிவித்துவிட்டாா். எஞ்சிய தொகுதிகளுக்கு வேட்பாளா்களை தோ்வு செய்வது, கட்சியின் மாநில மாநாடு, தோ்தல் தொடா்பான பணிகள் உள்ளிட்டவை குறித்து பொதுக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.