மாதவரத்தில் நண்பா்களிடையே மோதல்: ஒருவா் காயம்

மாதவரத்தில் மதுபோதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி
Published on

மாதவரத்தில் மதுபோதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மாதவரம் தெலுங்கு காலனியை சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டது. பின்னா் கிஷோா் அங்கிருந்து வீட்டுக்கு சென்றபோது, அவரது நண்பா்கள் 4 போ் வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கிஷோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்கு பதிந்து, மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே நின்றிருந்த ராஜன் உள்ளிட்ட 4 சிறுவா்களை கைது செய்தனா். அவா்களிடம் இருந்த அரிவாள், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com