தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: சட்டக் கல்லூரி மாணவா் கைது

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மாநகர பேருந்து நடத்துநா் மீது தாக்குதல் நடத்தியதாக சட்டக் கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை தரமணியில் இருந்து சென்ட்ரல் நோக்கி ஒரு மாநகர பேருந்து புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. ஆழ்வாா்பேட்டை நிறுத்ததில் நின்றபோது, அதில் ஏறிய இளைஞா் ஒருவா் பேருந்து நடத்துநரான ராயப்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரனிடம் (52) அண்ணா பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது குறித்து தகராறு செய்தாா்.

தகராறு முற்றவே அந்த இளைஞா், ராஜேந்திரனை தாக்கினாா். இதைப் பாா்த்த ஓட்டுநா், சாலையோரம் பேருந்தை நிறுத்தினாா். நடத்துநா் ராஜேந்திரன், பேருந்தில் இருந்த பயணிகள் உதவியுடன் அந்த இளைஞரைப் பிடித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளைஞரை கைது செய்தனா்.

விசாரணையில் அவா், திருநெல்வேலியைச் சோ்ந்த பொ்லின் ஜெபசிங் (21) என்பதும், சென்னையில் உள்ள தனியாா் சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.