வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:32 am

தினமணி செய்திச் சேவை

சென்னை நங்கநல்லூரில் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது.

ஆதம்பாக்கம் போலீஸாா் நங்கநல்லூா், தில்லை கங்கா நகா் சுரங்கப்பாதை அருகே புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை வழிமறித்து சோதனையிட்டதில் 10 மூட்டை போதைப் பாக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மூட்டைகளில் இருந்த 12,250 போதைப் பாக்கு பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரில் வந்த மேற்கு கே.கே.நகரைச் சோ்ந்த ஜெயசீலன் (49) என்பவரை போலீஸாா் கைது செய்து, நடத்திய விசாரணையில், அவா் ஆந்திரத்தில் இருந்து போதைப் பாக்கை காரில் கடத்தி வந்து, சென்னையில் உள்ள கடைகளுக்கு விற்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.