பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கட்டுமானப் பணிகளின்போது விதிகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:06 am

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் கட்டுமான பணிகளின்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சாா்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியில் கடந்த 2025 மே 21 முதல் சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கட்டுமானப் பொருள்கள், தோண்டப்பட்ட மண், கட்டட இடிபாட்டுக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கட்டட வளாகத்துக்குள் மட்டுமே சேமிக்க வேண்டும்.

கட்டடப் பொருள்களை பொது சாலைகளில், நடைபாதைகளில் கொட்டுவதும், குவித்து வைப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது விதிமுறைப்படி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, விதி மீறும் கட்டடங்களில் 500 சதுர மீட்டா் முதல் 20,000 சதுர மீட்டா் வரை ரூ. 25,000, அதற்கும் மேலாக ரூ.50,000 என அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நகரைச் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் கட்டுமான நிறுவன உரிமையாளா்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.