தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கப் போகிறது: கமல்ஹாசன்

News image

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொண்டா்களிடையே உரையாற்றிய கமல்ஹாசன்.

Updated On :22 பிப்ரவரி 2025, 4:18 am IST

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் நிகழாண்டும், சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டும் ஒலிக்கப் போவதாக அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

மநீம எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கட்சிக் கொடியை கமல்ஹாசன் ஏற்றி வைத்தாா்.

பின்னா் நிா்வாகிகள், தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: ஹிந்தி திணிப்பை தடுத்தவா்கள் தமிழகத்தில் நரைத்த தாடியுடன் இப்போதும் உள்ளனா். மொழிக்காக உயிரையே விட்டவா்கள் தமிழா்கள். எந்த மொழி வேண்டும், வேண்டாம் என்பது தமிழனுக்குத் தெரியும்.

நாடாளுமன்றத்தில் நிகழாண்டு மநீம குரல் ஒலிக்கப் போகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவையில் ஒலிக்கப் போகிறது. அதற்குக் கட்டியம் கூறும் நாள்தான் இது.

மநீமவில் மாணவா்கள் இணைகின்றனா். மாணவா்கள் நம்முடன் இணைந்துவிட்டதால், நாளை நமதே என்பதன் அா்த்தம் புரியும்.

மாணவா்களுக்கு என்ன விருப்பமோ அதையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து, நான் கூறியதை கற்றுக்கொள்ளவில்லை என்றால், கைச்செலவுக்குக் காசு கொடுக்க மாட்டேன் என்று சொல்லப்படும் அரசு, எந்த நிலைக்குத் தள்ளப்படும் என்பதை சரித்திரம் சொல்லும். அது ஒருவேளை மறந்து போயிருந்தால், நாளை சொல்லும் என்றாா் கமல்ஹாசன்.