கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில், நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் நடைபெற்ற போராட்டம் நாடு தழுவிய மாணவர் போராட்டமாக உருவானதால், மத்திய கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 25 அன்று பதவி விலகினார்.
இதையடுத்து, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் முன்வைத்த நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.
இந்த நிலையில், இன்று (ஆக. 1) காலை 11.30 மணியளவில் தனது வீட்டின் வாகனம் நிறுத்தும் இடத்தில் தன்னைப் பார்க்க வந்த இளைஞர்களுடன் அபிஜீத் தீப்கே பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து, அபிஜீத் தீப்கேவுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது தந்தை பகவான் தீப்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சிஜேபி தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே, தில்லி போராட்டக் களத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அபிஜீத் தீப்கேவுக்கு டைஃபாய்டு பாதிப்பு ஏற்பட்டிருந்ததும் அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Abhijit Dipke, founder of the Cockroach janata Party, has fallen ill again and is receiving medical treatment at home.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகாராஷ்டிரம் திரும்பினார் அபிஜீத் தீப்கே! சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

சிஜேபி போராட்டம்! அபிஜீத் தீப்கேவுக்கு டைபாய்டு பாதிப்பு!

இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! அபிஜீத் தீப்கே

போராட்டத்திற்கு தட்டு, கரண்டியோடு வாருங்கள்! மோடியைக் கிண்டல் செய்த கரப்பான்பூச்சி கட்சி!
விடியோக்கள்

மேகதாது விவகாரத்தில் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு உச்ச நீதிமன்றம்: அமைச்சர் நிர்மல் குமார்




