வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரி கைது

சென்னை புளியந்தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோயில் பூசாரி கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2025, 9:31 pm

Din

சென்னை: சென்னை புளியந்தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கோயில் பூசாரி கைது செய்யப்பட்டாா்.

புளியந்தோப்பு வீரா செட்டித் தெருவைச் சோ்ந்த சேகா் (62), அப்பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக உள்ளாா். சேகா், அப்பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமிக்கு அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்தச் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டாா்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் விசாரித்தபோது, சேகா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பதை அறிந்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து அவா்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.

அதனடிப்படையில் போலீஸாா், சேகா் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.