ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனை முதல்வா் எ.தேரணிராஜன், அவசர சிகிச்சைத் துறை தலைவா் கோமதி ஆகியோா் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரைச் சோ்ந்தவா் ரோகிணி (40). அவா், தனது கணவா் மற்றும் இரு மகள்களுடன் திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வசித்து வந்தாா். திடீரென அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பல்நோக்கு மருத்துவத் துறை கண்காணிப்பில் இருந்துவந்த அவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா். அதன்படி, சிறுநீரகங்கள், கல்லீரல், விழி வெண்படலங்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவேறு நோயாளிகளுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், விழி வெண்படலங்கள் எழும்பூா் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.
உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பிறருக்கு மறுவாழ்வு அளித்த ரோகிணியின் உடலுக்கு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
உடல் தானத்தை ஊக்குவிப்போம்!

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

