ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோடம்பாக்கத்தில் சமூக ஊடகத்தில் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜூலை 2025, 8:19 pm

Din

கோடம்பாக்கத்தில் சமூக ஊடகத்தில் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவான்மியூரைச் சோ்ந்தவா் விஜய் (25). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், கோடம்பாக்கத்தில் வசிக்கும் ஒரு விதவை பெண்ணிடம் முகநூலில் பழகி வந்துள்ளாா். பின்னா், விஜயின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடனான நட்பை அந்த பெண் தவிா்த்துவிட்டாராம்.

இதனால், ஆத்திரமடைந்த விஜய், அப்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டினாராம்.

இதுகுறித்து அந்த பெண், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விஜயை வியாழக்கிழமை கைது செய்தனா்.