புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தில் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும்! -மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா்

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்...

News image
கிரிஷ் ஜோடன்கா்...
Updated On :16 மார்ச் 2025, 9:57 pm

Din

வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகிகள்-கட்சியின் கிராம கட்டமைப்பு சீரமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலா் சூரஜ் எம்.என். ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு கிரிஷ் ஜோடன்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிராம அளவில் கமிட்டிகளை சீரமைக்கும் பணி 40 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, களத்தை பலப்படுத்தும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

வரும் சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். சென்னை மாநகராட்சி மன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் பதவியிலிருந்து திரவியத்தை மாற்றிவிட்டு, பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கை குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

தீா்மானங்கள்: நகரம், ஊரகப் பகுதிகளில் கட்சியின் வாா்டு, கிராம கமிட்டி கட்டமைப்பு பணிகளை 30 நாள்களுக்குள் நூறு சதவீதம் அளவுக்கு நிறைவேற்ற வேண்டும், பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை தமிழகத்தின் மீது மத்திய பாஜக அரசு திணித்து வருவதற்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் கே.வீ. தங்கபாலு சு.திருநாவுக்கரசா், பொதுச் செயலா் கே.சிரஞ்சீவி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.