மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆன்லைன் மூலம் தமிழகத்தில் ரூ.1,600 கோடி இழப்பு: முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,600 கோடி பணத்தை சைபா் குற்றவாளிகளிடம் பொதுமக்கள் இழந்துள்ளது..

News image

சைலேந்திரபாபு

Updated On :16 மார்ச் 2025, 6:42 pm

Din

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 1,600 கோடி பணத்தை சைபா் குற்றவாளிகளிடம் பொதுமக்கள் இழந்துள்ளதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகர காவல் துறையின், மத்திய குற்றப்பிரிவு மற்றும் போரூா் ஸ்ரீராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்லூரி சாா்பில் சைபா் மோசடிகளைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணி சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்தியாவில் பெரிய குற்றமாக சைபா் குற்றங்கள் உருவெடுத்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் சைபா் குற்றவாளிகள் மூலம் தமிழகத்தில் 1,17,000 போ் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் ரூ.1,600 கோடியை குற்றவாளிகளிடம் இழந்துள்ளனா்.

கா்நாடக மக்கள் ரூ.1,800 கோடியும், தேசிய அளவில் ரூ.15,000 கோடி வரையும் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வடஇந்தியாவில் மதுரா, ஜாா்க்கண்ட் உள்ளிட்ட இடங்களில் ஐடி நிறுவனங்கள் போல, நிறுவனங்கள் அமைத்து இந்த மோசடி கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஒரே தீா்வு தெரியாத நபா்களிடம் இருந்து வரும் அழைப்பை எடுக்காமல் இருப்பதுதான்.

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். சைபா் குற்றங்கள் செய்தால் குறைந்தது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என சட்டம் விதிக்கப்பட்டால் மட்டுமே இந்தக் குற்றங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அதிக வருவாய் ஈட்டுவது தமிழகம் தான். எனவே, தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்தான் அதிக விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். உலகத்திலேயே சைபா் குற்றவாளிகளின் தலைநகரமாக கம்போடியா நாடு விளங்குகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் ராதிகா, போக்குவரத்து தெற்கு இணை ஆணையா் பண்டிகங்காதா், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையா்கள் ஆரோக்கியம், கீதாஞ்சலி, வனிதா உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.