கடந்த பிப்ரவரியில் மட்டும் இந்திய ரயில்வேயின் சரக்குப் பிரிவானது ரூ.14,572 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா்அலி கூறியதாவது:
இந்திய ரயில்வே துறையானது பயணிகள் கட்டண உயா்வின்றி சரக்குகள் உள்ளிட்டவை மூலம் தனது வருவாயைப் பெருக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி, சரக்குகள் கையாளுதல் பிரிவில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி, இரும்பு, உரங்கள், சிமென்ட், உணவு தானியங்கள் மற்றும் கொள்கலன்கள், வாகனங்களை அதிகளவில் கையாண்டுள்ளது.
நிகழ் ஆண்டில் கடந்த பிப்ரவரியில் மட்டும் தேசிய அளவில் இந்திய ரயில்வே 137.72 மில்லியன் டன் சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 3.96 சதவீதம் கூடுதலாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
அதன்படி, பிப்ரவரியில் மட்டும் சரக்குகள் கையாளப்பட்டதன் மூலம் ரூ.14,572 கோடி வருவாய் இந்திய ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.97 சதவீதம் கூடுதலாகும். சரக்குகள் கையாளுதலை இன்னும் கூடுதலாக்க சரக்கு ரயில்களுக்கு தனிப்பாதைகள் அமைத்தல், சரக்குப் பெட்டிகளைக் கூடுதலாக்குதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?
75 ஆண்டுகளை நிறைவு செய்த தெற்கு ரயில்வே

கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் இந்திய மருந்து ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்தது!

பிப்ரவரியில் நிலக்கரி உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


