தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி

ஒரே மாதத்தில் ரயில்வேயின் சரக்கு பிரிவு வருவாய் ரூ.14,572 கோடி

News image

EPS

Updated On :7 மார்ச் 2026, 10:35 pm

கடந்த பிப்ரவரியில் மட்டும் இந்திய ரயில்வேயின் சரக்குப் பிரிவானது ரூ.14,572 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஜாபா்அலி கூறியதாவது:

இந்திய ரயில்வே துறையானது பயணிகள் கட்டண உயா்வின்றி சரக்குகள் உள்ளிட்டவை மூலம் தனது வருவாயைப் பெருக்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது. அதன்படி, சரக்குகள் கையாளுதல் பிரிவில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. நிலக்கரி, இரும்பு, உரங்கள், சிமென்ட், உணவு தானியங்கள் மற்றும் கொள்கலன்கள், வாகனங்களை அதிகளவில் கையாண்டுள்ளது.

நிகழ் ஆண்டில் கடந்த பிப்ரவரியில் மட்டும் தேசிய அளவில் இந்திய ரயில்வே 137.72 மில்லியன் டன் சரக்குகளை எடுத்துச் சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 3.96 சதவீதம் கூடுதலாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.

அதன்படி, பிப்ரவரியில் மட்டும் சரக்குகள் கையாளப்பட்டதன் மூலம் ரூ.14,572 கோடி வருவாய் இந்திய ரயில்வே துறைக்கு கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 2.97 சதவீதம் கூடுதலாகும். சரக்குகள் கையாளுதலை இன்னும் கூடுதலாக்க சரக்கு ரயில்களுக்கு தனிப்பாதைகள் அமைத்தல், சரக்குப் பெட்டிகளைக் கூடுதலாக்குதல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது என்றாா்.