அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிப்ரவரியில் நிலக்கரி உற்பத்தி 2 கோடி டன்னாக அதிகரிப்பு

நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2.04 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளன.

News image
Updated On :3 மார்ச் 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2.04 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளன.

அதேபோல், சுரங்கங்களிலிருந்து நிலக்கரி விநியோகம் 1.77 கோடி டன்னாக அதிகரித்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நடப்பு 2025-26 நிதியாண்டில், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி முந்தைய 2024-25 ஆண்டைவிட 11.58 சதவீதம் அதிகரித்து, 18.71 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் நிலக்கரி விநியோகமும் 6.78 சதவீதம் வளா்ச்சி கண்டு, 18.44 கோடி டன்னை எட்டியுள்ளது.

நிலக்கரித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்திருத்தங்கள் மற்றும் பங்குதாரா்களுக்கு அளிக்கப்படும் தொடா் ஆதரவு ஆகியவை இந்த உற்பத்தி அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.