வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரிப்பு!

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரித்து 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

News image

sugar

Updated On :2 மார்ச் 2026, 4:27 pm

புதுதில்லி: இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரித்து 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

அக்டோபரில் தொடங்கி, நடப்பு சந்தைப்படுத்தல் பருவத்தில், பிப்ரவரி வரையான காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

சக்கரை உற்பத்தி மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவிலிருந்து, கடந்த ஆண்டை விட 12.43 சதவீதம் அதிகம் என்று தொழில்துறை அமைப்பான இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 220 லட்சம் டன்னாக இருந்தது.

மகாராஷ்டிரத்தில் சக்கரை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆண்டில், பிப்ரவரி வரை இது 95.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதுவே 75 லட்சம் டன்னாக இருந்ததாக இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

நாட்டின் 2வது பெரிய உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சக்கரை உற்பத்தி 73 லட்சம் டன்னிலிருந்து 74.80 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் 3வது பெரிய உற்பத்தி மாநிலமான கர்நாடகாவில் சக்கரை உற்பத்தியானது 38.2 லட்சம் டன்னிலிருந்து 44.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 330 ஆலைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மொத்தம் 305 தொழிற்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன.

ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரையிலான சிறப்பு பருவத்தில் தெற்கு கர்நாடகாவில் உள்ள சில ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில், பிப்ரவரி 15ஆம் தேதி நிலவரப்படி நிலுவைத் தொகை ரூ.4,601 கோடியாக இருந்தது, கடந்த ஆண்டு இது ரூ.2,744 கோடியை விட இது அதிகமாகும்.

இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் நிதியாண்டிற்கான மொத்த சர்க்கரை உற்பத்தியை 324 லட்சம் டன்னாக நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தியான 296.2 லட்சம் டன்னை விட இது அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.