சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரிப்பு!

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரித்து 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

News image
sugar
Updated On :2 மார்ச் 2026, 4:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி 12.43% அதிகரித்து 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

அக்டோபரில் தொடங்கி, நடப்பு சந்தைப்படுத்தல் பருவத்தில், பிப்ரவரி வரையான காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 247.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

சக்கரை உற்பத்தி மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகாவிலிருந்து, கடந்த ஆண்டை விட 12.43 சதவீதம் அதிகம் என்று தொழில்துறை அமைப்பான இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

2024-25 சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் சர்க்கரை உற்பத்தி 220 லட்சம் டன்னாக இருந்தது.

மகாராஷ்டிரத்தில் சக்கரை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆண்டில், பிப்ரவரி வரை இது 95.3 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதுவே 75 லட்சம் டன்னாக இருந்ததாக இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தது.

நாட்டின் 2வது பெரிய உற்பத்தி மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சக்கரை உற்பத்தி 73 லட்சம் டன்னிலிருந்து 74.80 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் 3வது பெரிய உற்பத்தி மாநிலமான கர்நாடகாவில் சக்கரை உற்பத்தியானது 38.2 லட்சம் டன்னிலிருந்து 44.5 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 330 ஆலைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது மொத்தம் 305 தொழிற்சாலைகள் செயல்பாட்டில் உள்ளன.

ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரையிலான சிறப்பு பருவத்தில் தெற்கு கர்நாடகாவில் உள்ள சில ஆலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில், பிப்ரவரி 15ஆம் தேதி நிலவரப்படி நிலுவைத் தொகை ரூ.4,601 கோடியாக இருந்தது, கடந்த ஆண்டு இது ரூ.2,744 கோடியை விட இது அதிகமாகும்.

இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் நிதியாண்டிற்கான மொத்த சர்க்கரை உற்பத்தியை 324 லட்சம் டன்னாக நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டில் உற்பத்தியான 296.2 லட்சம் டன்னை விட இது அதிகமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.