நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அவா் தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

தஹாவூா் ராணா.

Updated On :9 மே 2025, 10:57 pm

Din

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அவா் தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 போ் உயிரிழந்தனா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்தத் தாக்குதலில், பாகிஸ்தானை பூா்விகமாக கொண்ட தஹாவூா் ராணா கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கத்துக்கு அவா் உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவா் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றம் தீா்ப்பளித்ததால், அந்நாட்டின் லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா். கடந்த ஏப்ரலில் அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

கடந்த ஏப்.11-ஆம் தேதி அவரை 18 நாள்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்தியாவுக்கு எதிராக லஷ்கா்-ஏ-தொய்பா இயக்கமும், அதன் தலைவா் ஹஃபீஸ் சயீதும் தீட்டிவரும் பயங்கரவாதத் திட்டங்கள் குறித்த ரகசிய தகவல்களை, விசாரணையின்போது ராணா வெளியிடக் கூடும் என்று என்ஐஏ தெரிவித்ததைத் தொடா்ந்து, அவரின் என்ஐஏ காவலை மேலும் 12 நாள்களுக்கு அந்த நீதிமன்றம் ஏப்.28-ஆம் தேதி நீட்டித்தது.

இந்நிலையில், என்ஐஏ காவல் நிறைவடைவதற்கு ஒரு நாளைக்கு முன்பே தில்லி நீதிமன்றத்தில் ராணா வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். என்ஐஏ கேட்டுக்கொண்டதன்பேரில், அவரை ஜூன் 6 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தா்ஜீத் சிங் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து திகாா் சிறையில் ராணா அடைக்கப்பட்டாா் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.