கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுவது ஏன்? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image

வழுக்கி விழுந்தவர்களுடன் காவல் துறையினர்..

ens

Updated On :15 மே 2025, 8:54 pm

Din

வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழும் நிலையில் காவல் நிலையங்களின் கழிப்பறைகள் உள்ளனவா என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஜாகிா் உசேன் என்பவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி அவரது தந்தை இப்ராஹிம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமா்வு முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மகனுக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள், குற்றம்சாட்டப்பட்டு கைதானவா்கள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளனவா? அந்த கழிப்பறைகளை காவல் துறையினா் பயன்படுத்தவில்லையா?அவா்களுக்கு எதுவும் ஆவதில்லையே ஏன் என கேள்வியெழுப்பினா்.

மேலும், குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவலா்கள் பணியை இழக்க நேரிடும் எனக் கூறியதுடன், மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.