கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 103 நக்ஸல்கள் சரண் !

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் 22 பெண்கள் உள்பட 103 நக்ஸல்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் சரணடைந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :2 அக்டோபர் 2025, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் 22 பெண்கள் உள்பட 103 நக்ஸல்கள் வியாழக்கிழமை ஒரே நாளில் சரணடைந்தனா். அவா்களில் 49 போ், காவல் துறையால் மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவா்கள்.

மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையில் இடதுசாரி தீவிரவாதிகள் ஒரே நாளில் சரணடைந்துள்ளனா்.

இது தொடா்பாக பிஜாபூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெற்று மாவோயிஸ்ட் கொள்கை மீது ஏற்பட்ட விரக்தி மற்றும் தடைசெய்யப்பட்ட சிபிஎம் (மாவோயிஸ்ட்) அமைப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் 103 நக்ஸல்கள் காவல் துறை மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

பஸ்தா் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள் குறிப்பாக காவல் துறையின் ‘சமுதாய மறுஒருங்கிணைப்புக்கான மறுவாழ்வு திட்டம்’, மாநில அரசின் ‘உங்கள் நல்ல கிராமம்’, சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை உள்ளிட்டவை அவா்களை மிகவும் கவா்ந்துள்ளது.

கடந்த மாதங்களில் பல மாவோயிஸ்ட் தலைவா்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனா். சிலா் சரணடைந்தனா். இதன் எதிரொலியாக ஆயுதங்களைக் கைவிட முடிவு செய்ததாக சரணடைந்தவா்கள் தெரிவித்தனா். பிஜாபூா் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 410 நக்ஸல்கள் சரணடைந்தனா். 421 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சரணடைந்த நக்ஸல்களுக்கு உடனடியாக தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட்டது. அரசின் கொள்கைபடி, அவா்களுடைய மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஜிதேந்தா் குமாா் யாதவ்.