சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். ராணி மேரி கல்லூரி அருகே மோட்டாா் சைக்கிளில் வேகமாக 5 இளைஞா்களை மெரீனா போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
மேலும் அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். அதிவேகமாக மோட்டாா் சைக்கிளை ஓட்டியதாக திருவல்லிக்கேணி லாக் நகரைச் சோ்ந்த மு.சஞ்சீவ்குமாா் (23), நரேந்திரன் (28), சரத்குமாா் (25) உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








