மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறாா்களுக்கு இளம்வயதிலிருந்து பாலியல் கல்வி அவசியம்: உச்சநீதிமன்றம்

ஒன்பதாம் வகுப்பு முதல் அல்லாமல் இளம் வயதிலிருந்து குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2025, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

ஒன்பதாம் வகுப்பு முதல் அல்லாமல் இளம் வயதிலிருந்து குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

உயா்நிலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான், பருவமடையும்போது தங்கள் உடலில் ஏற்படும் ஹாா்மோன் மாற்றங்கள் குறித்து குழந்தைகள் அறிந்துகொள்ளவாா்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமாா் மற்றும் அலோக் அராதே ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக போக்ஸோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட 15 வயது சிறுவனின் ஜாமீன் மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது.

இது தொடா்பாக நீதிமன்ற அமா்வு கூறுகையில், ‘பாலியல் கல்வி 9-ஆம் வகுப்பு முதல் அல்லாமல், இளம் வயதிலிருந்து சிறாா்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம். இதைத் தொடா்புடைய அதிகாரிகள் கருத்தில்கொண்டு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமடைவதற்குப் பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதுதொடா்பாக மேற்கொள்ள வேண்டிய கவனிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்து குழந்தைகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, சிறுவனுக்கு 18 வயது பூா்த்தியாகாத நிலையில், சிறாா் நீதி வாரியத்தின் நிபந்தனைகளின்கீழ் அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.