திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதைப் பற்றி...

News image
பலத்த மழை- PTI
Updated On :12 அக்டோபர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்.18 வரை பலத்த மழை: இதில் குறிப்பாக, அக்.13-இல் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், அக்.14-இல் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும், அக்.15-இல் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல், அக்.16-இல் கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், அக்.17,18-ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.13-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேட்டூா் (சேலம்), மணப்பாறை (திருச்சி) , ஆனைப்பாளையம் (கரூா்) - தலா 80 மி.மீ., குறிஞ்சிப்பாடி (கடலூா்), பண்ருட்டி (கடலூா்), திருச்சுழி (விருதுநகா்), திருமயம் (புதுக்கோட்டை), அன்னவாசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), ராசிபுரம் (நாமக்கல்), அரியலூா் - தலா 70 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.