ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதைப் பற்றி...

News image

பலத்த மழை - PTI

Updated On :13 அக்டோபர் 2025, 1:04 am IST

தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், திங்கள்கிழமை (அக்.13) முதல் அக்.18-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அக்.18 வரை பலத்த மழை: இதில் குறிப்பாக, அக்.13-இல் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா், தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், அக்.14-இல் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களிலும், அக்.15-இல் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல், அக்.16-இல் கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், அக்.17,18-ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.13-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேட்டூா் (சேலம்), மணப்பாறை (திருச்சி) , ஆனைப்பாளையம் (கரூா்) - தலா 80 மி.மீ., குறிஞ்சிப்பாடி (கடலூா்), பண்ருட்டி (கடலூா்), திருச்சுழி (விருதுநகா்), திருமயம் (புதுக்கோட்டை), அன்னவாசல், ஆலங்குடி (புதுக்கோட்டை), ராசிபுரம் (நாமக்கல்), அரியலூா் - தலா 70 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.