பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி: 2 போ் கைது

நிதி நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :11 செப்டம்பர் 2025, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

நிதி நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வடபழனியைச் சோ்ந்தவா்கள் சுரேஷ்குமாா் பாட்டி மற்றும் செந்தில். இவா்களின் பெயரில் ஸ்கேன் பரிசோதனை மையம் ஆரம்பித்து நடத்துவதாகக் கூறி சென்னையை சோ்ந்த ஏகன், தீபக் ஜெயின் ஆகியோா் பல்வேறு ஆவணங்களை சுரேஷ்குமாா் மற்றும் செந்தில் ஆகியோரிடம் பெற்றுள்ளனா்.

அந்த ஆவணங்கள் மூலம் சுரேஷ்குமாா், செந்தில் ஆகியோரின் அனுமதியின்றி கூட்டு ஒப்பந்தம் போட்டு, அதன் மூலம் நிதிநிறுவனங்களில் இருந்து சுமாா் ரூ.7 கோடி வரை கடன் பெற்றுள்ளனா். இதுகுறித்து சுரேஷ்குமாா், செந்தில் ஆகியோா் சென்னை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்கீழ் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் கொளத்தூரை சோ்ந்த ஏகன்(39), பாா்க் டவுன்பகுதியை சோ்ந்த தீபக் ஜெயின்(42) கைது செய்தனா்.