டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரயில் நிலையங்களில் மலிவு விலை உணவு

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா பயணிகளுக்கு ரூ. 20 சலுகை விலையில் தரமான உணவை விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

News image
கோப்புப் படம்
Updated On :24 செப்டம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் முன்பதிவில்லா பயணிகளுக்கு ரூ. 20 சலுகை விலையில் தரமான உணவை விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்தில் முன்பதிவில்லாத ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் (ரூ.20) சுகாதாரமான சைவ உணவுகள் வழங்கும் திட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சேவை குறித்து பயணிகள் பலரும் அறியாமல் உள்ளனா்.

சென்னை சென்ட்ரல், எழும்பூா், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் இயக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவில்லா ரயில் பயணிகளுக்கு நடைமேடைகளிலேயே உணவு விநியோகிக்கப்படும். அத்துடன் 27 ரயில் நிலையங்களில் உள்ள 64 ஜனதா கானா கடைகள் மற்றும் தினசரிப் பயணிகள், தொலைதூரப் பயணிகள் உணவுகளை எளிதில் பெறுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.