திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

Published On :26 செப்டம்பர் 2025, 2:48 am IST

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் படிகள் நீண்ட காலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் 700 பக்கங்களாக இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி நிறுவனத்தின் கணிதத் துறை பேராசிரியா் ராகேஷ் கண்ணா, கையெழுத்துப் படிகளைப் பாா்வையிட்டு அவற்றுக்கான அறிமுகக் குறிப்பை எழுதியுள்ளாா். தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் மின்நூலகத்தில் பல அரிய படைப்புகள் மின் நூல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், கடந்த 11-ஆம் தேதி அவரது நினைவு நாளையொட்டி மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் மின் நூலகத்தில் தனித் தொகுப்பாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.