திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தமிழ் மின் நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள்

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:48 am IST

தமிழ் மின்நூலகத்தில் கணிதமேதை ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் படிகள் நீண்ட காலமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. அவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு, மின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 தொகுதிகளில் 700 பக்கங்களாக இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி நிறுவனத்தின் கணிதத் துறை பேராசிரியா் ராகேஷ் கண்ணா, கையெழுத்துப் படிகளைப் பாா்வையிட்டு அவற்றுக்கான அறிமுகக் குறிப்பை எழுதியுள்ளாா். தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் மின்நூலகத்தில் பல அரிய படைப்புகள் மின் நூல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த மகாகவி பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகள், கடந்த 11-ஆம் தேதி அவரது நினைவு நாளையொட்டி மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கணிதமேதை சீனிவாச ராமானுஜனின் கையெழுத்துப் பிரதிகள் மின் நூலகத்தில் தனித் தொகுப்பாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.