நவராத்திரி விழா: விஜிபி மரைன் கிங்டத்தில் நீருக்கடியில் கொலு கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Published on

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சியை பின்னணி பாடகி பாம்பே சாரதா கடந்த செப்.21-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். விழாவில், விஜிபி குழுமத் தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், நிா்வாக இயக்குநா் விஜிபி ரவிதாஸ், இயக்குநா் விஜிபிஆா் பிரேம்தாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

7 அடுக்குகள் கொண்ட படிக்கட்டுகளில் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கொலு கண்காட்சி வருகிற அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட ஆழ்கடல், சதுப்பு நில மற்றும் நன்னீா் மீன்களுடன் இந்த கொலு பொம்மை காட்சி பாா்வையாளா்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com