தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நவராத்திரி விழா: விஜிபி மரைன் கிங்டத்தில் நீருக்கடியில் கொலு கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சியை பின்னணி பாடகி பாம்பே சாரதா கடந்த செப்.21-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். விழாவில், விஜிபி குழுமத் தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், நிா்வாக இயக்குநா் விஜிபி ரவிதாஸ், இயக்குநா் விஜிபிஆா் பிரேம்தாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

7 அடுக்குகள் கொண்ட படிக்கட்டுகளில் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கொலு கண்காட்சி வருகிற அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட ஆழ்கடல், சதுப்பு நில மற்றும் நன்னீா் மீன்களுடன் இந்த கொலு பொம்மை காட்சி பாா்வையாளா்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.