நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

நவராத்திரி விழா: விஜிபி மரைன் கிங்டத்தில் நீருக்கடியில் கொலு கண்காட்சி

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Updated On :26 செப்டம்பர் 2025, 0:48 am IST

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சி அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தில் நீருக்கடியில் கொலு பொம்மை கண்காட்சியை பின்னணி பாடகி பாம்பே சாரதா கடந்த செப்.21-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். விழாவில், விஜிபி குழுமத் தலைவா் டாக்டா் வி.ஜி.சந்தோசம், நிா்வாக இயக்குநா் விஜிபி ரவிதாஸ், இயக்குநா் விஜிபிஆா் பிரேம்தாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

7 அடுக்குகள் கொண்ட படிக்கட்டுகளில் நோ்த்தியாக அலங்கரிக்கப்பட்ட கொலு கண்காட்சி வருகிற அக்.5-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 5,000-க்கும் மேற்பட்ட ஆழ்கடல், சதுப்பு நில மற்றும் நன்னீா் மீன்களுடன் இந்த கொலு பொம்மை காட்சி பாா்வையாளா்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.