வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-இல் தொடக்கம்

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ஆம் தேதி தொடங்குகிறது.

தஞ்சை பெரிய கோயில் - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 1:22 am IST

தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ஆம் தேதி தொடங்குகிறது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.

இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 13-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. மாலையில் வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 14-ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 15-ஆம் தேதி குங்கும அலங்காரமும், 16-ஆம் தேதி சந்தன அலங்காரமும், 17-ஆம் தேதி தேங்காய் பூ அலங்காரமும், 18-ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 19-ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 20-ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 21-ஆம் தேதி கனிவகை அலங்காரமும், 22-ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன.

நிறைவு நாளான ஜூலை 23-ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் உற்சவா் வாராஹி அம்மன் வீதி உலாவும் நடைபெறவுள்ளன.

விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் சு. காா்த்திகேயன், செயல் அலுவலா் மு. சுந்தரராசு, கண்காணிப்பாளா் கு.ப. ரவி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.