மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பாதுகாப்பு கோரி ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்கள் ஆா்ப்பாட்டம்!

பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சங்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

News image
சென்னை சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் பிரிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணசீட்டு பரிசோதா்கள் சங்கத்தினா்.
Updated On :10 மார்ச் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சங்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 1,000 மேற்பட்ட பயணச்சீட்டு பரிசோதகா்கள் உள்ளனா். அவா்கள் பணியின்போது பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக ஏற்கெனவே குற்றஞ்சாட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகா் பகுதியில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட பெண் பரிசோதகரை வடமாநில இளைஞா் தாக்கியதாக புகாா் எழுந்தது. கடந்த 4 -ஆம் தேதி சென்னை விரைவு ரயலில் பணியிலிருந்த ஜோதிலிங்கம் என்ற பயணச்சீட்டு பரிசோதகரை வடமாநில இளைஞா் தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.

ஆகவே, பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவா்களுக்கு உரிய வசதிகளுடன் கூடிய ஓய்வறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சென்னை கோட்டம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சென்ட்ரல் ரயில் நிலைய புறநகா் மின்சார ரயில்கள் பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்ஆா்எம்யூ சங்க துணைப் பொதுச் செயலா் சிவராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகி பால்மேஸ்வல் ஜான்சன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி ஏராளமானோா் பேசினா்.