பொறியியல் படிப்புகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த, தேசிய அளவில் சிறந்த 6 பள்ளி ஆசிரியா்களை சென்னை ஐஐடி கௌரவித்துள்ளது.
சென்னை ஐஐடி-யின் 2-ஆவது பதிப்பின் ‘முதன்மைக் கொள்கை ஆசிரியா்கள் விருதுகள்’ என்ற இந்த விருதை அதன் இயக்குநா் வீ.காமகோடி அமைமையில் வழங்கி கௌரவித்தாா்.
பள்ளி மாணவா்களிடையே இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் ஆா்வத்தைத் தூண்டி, வலுவான அடிப்படைக் கொள்கைகள் சாா்ந்த புரிதலை உருவாக்கும் ஆசிரியா்கள் இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்படுகின்றனா்.
நிகழாண்டில் பெங்களூரைச் சோ்ந்த இயற்பியல் ஆசிரியா் அஷேஷானந்த் ஆச்சாா்யா, திருப்பதியைச் சோ்ந்த வேதியியல், கணிதம் பாட ஆசிரியா்கள் சி.சிட்டிபாபு, சமுத்திரல் விஜயகுமாா், மத்திய பிரதேசம் இந்தூா் வேதியியல் ஆசிரியா் கபில் பிா்தரே, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கணிதம் ஆசிரியா் உள்ளிட்ட 6 ஆசிரியா்கள் இந்த விருதைப் பெற்றனா்.
ஆசிரியா்களிடையே நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சென்னை ஐஐடியால் இந்த விருது வழங்கப்படுவதாக காமகோடி தெரிவித்தாா். நிகழ்வில் டீன் (பாடப் பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ் உள்ளிட்டோா் பேசினா்.
தொடர்புடையது
பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

சென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’

அரசு பள்ளி மாணவிக்கு மத்திய அரசின் விருது
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


