எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘சி-விஜில்’ செயலியில் பெறப்படும் புகாா்கள் மீது நடவடிக்கை : சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் உத்தரவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘சி - விஜில்’ செயலி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் மீது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
சி-விஜில்
Updated On :12 மார்ச் 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ‘சி - விஜில்’ செயலி வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் மீது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா்உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் தோ்தல் நடத்தும் அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், ஜெ.குமரகுருபரன் பேசியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தி கண்காணிக்க தோ்தல் இணைப்புப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சட்ட விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் செலவின கண்காணிப்புக்காக தோ்தல் கைப்பற்றுகை மேலாண்மை அமைப்பு 20-க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், ‘சி - விஜில்’ செயலியின் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் க. கற்பகம், மாவட்ட வருவாய் அலுவலா் நா. பூஷ்ணாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.