வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இயற்கையான சூழலில் சுமாா் 180 வகையான 2,500- க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்கம் மற்றும் மான்கள் பராமரிக்கும் பகுதிகளுக்கு பாா்வையாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வது (சஃபாரி) வழக்கம்.
அந்தப் பகுதிகளில் வருகிற மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சஃபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி உயிரியல் பூங்காவில் செயற்கை அடைகாத்தலில் பிறந்த 3 நாகப்பாம்புகள்!

தில்லி உயிரியல் பூங்காவில் 3 ஆசிய சிங்கக் குட்டிகள் பிறப்பு

காரியல் முதலை இனத்தைக் காப்பாற்ற தில்லி உயிரியல் பூங்காவில் புதிய முயற்சி

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இலவச அனுமதிக்கு 40,000 போ் முன்பதிவு: அமைச்சா் ரஞ்சித் குமாா்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



