திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 2:06 am IST

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இயற்கையான சூழலில் சுமாா் 180 வகையான 2,500- க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்கம் மற்றும் மான்கள் பராமரிக்கும் பகுதிகளுக்கு பாா்வையாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வது (சஃபாரி) வழக்கம்.

அந்தப் பகுதிகளில் வருகிற மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சஃபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.