பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Published On :

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இயற்கையான சூழலில் சுமாா் 180 வகையான 2,500- க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்கம் மற்றும் மான்கள் பராமரிக்கும் பகுதிகளுக்கு பாா்வையாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வது (சஃபாரி) வழக்கம்.

அந்தப் பகுதிகளில் வருகிற மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சஃபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.