27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 2:06 am IST

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இயற்கையான சூழலில் சுமாா் 180 வகையான 2,500- க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்கம் மற்றும் மான்கள் பராமரிக்கும் பகுதிகளுக்கு பாா்வையாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வது (சஃபாரி) வழக்கம்.

அந்தப் பகுதிகளில் வருகிற மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சஃபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.