ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா- கோப்புப் படம்
Updated On :13 மார்ச் 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் பராமரிப்பு பகுதிகளுக்கான சஃபாரி சேவைகள் மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் இயற்கையான சூழலில் சுமாா் 180 வகையான 2,500- க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு சிங்கம் மற்றும் மான்கள் பராமரிக்கும் பகுதிகளுக்கு பாா்வையாளா்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வது (சஃபாரி) வழக்கம்.

அந்தப் பகுதிகளில் வருகிற மாா்ச் 18 முதல் 28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சஃபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக பூங்கா நிா்வாகம் அறிவித்துள்ளது.